top of page

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்

  • lakshmimandaleenag
  • Jan 17, 2022
  • 1 min read

Updated: Jan 18, 2022

கல்யாணி ஒரு நடிகை, நாடகங்களில் நடிப்பவள். சொந்த நாடக குழு நடத்தி வருபவள். ரங்கா ஒரு பத்திரிகையாளன். அண்ணாசாமி அந்த நாடக குழுவின் ஒருங்கிணைப்பாளர், கல்யாணியின் தந்தையின் நண்பராதலால் அவளின் பெற்றோரின் மறைவுக்குப்பின், அவளுக்கு ஆதரவை நிற்பவர்.


ஒருவர் மேல் ஒருவர் கொண்ட விருப்பத்தினால், அவர்களின் இயல்பால், கல்யாணி மற்றும் ரங்காவின் வாழ்க்கை எப்பாதையில் செல்கிறது என்பதே கதை.


பொதுவாக பல கதாபாத்திரங்கள், பல திருப்புமுனைகள், வெவ்வேறு காலகட்டங்களைக் கொண்ட கதைக்களம் போன்றவைகளால், ஒரு கதையின் விறுவிறுப்பு கூடலாம். ஆனால் மனித மனங்களின் நுட்பமான தன்மைகளை வெளிப்படுத்தும், கதாபாத்திர அமைப்புகளின் மூலம், இக்கதை நம்முள் ஒரு ஆழ்ந்த தேடலையும், பிரமிப்பையும், மெய்யுணர்தலையும் ஏற்படுத்திகிறது .




கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ஒரு கதையை நகர்த்திச்செல்லுமா? பாதிப்பை ஏற்படுத்துமா ? மனதின் விந்தையை உணர்த்துமா ? உவகை கொள்ளச்செய்யுமா? வாழ்வின் நிதர்சனம் உரைக்குமா ? அன்பின் விந்தை உணர்த்துமா ? ஆம் , செய்கிறது இக்கதை !!


கல்யாணி , ரங்கா , அண்ணாசாமி இவர்களின் பாத்திர படைப்பினால் ஜெயகாந்தன், படிப்பவரின் உள்ளத்துடன் உரையாடுகிறார் என்பது மிகையில்லை.

நெஞ்சை நெகிழச்செய்யும் அற்புத படைப்பு !!!



புத்தகத்திலிருந்து சில வரிகள் ...


நாம்ப ரோஜாகிட்டே எதிர்பார்க்கிறதெல்லாம் ஒரு ரோஜா தான். அந்த மாதிரி மனுஷாள் கிட்டயும் இருந்துட்டா-அவங்க இருக்கிற மாதிரியே அவங்களை ஒப்புத்துக்கறதுன்னு இருந்தா - இந்த மாதிரிப் பிரச்னையே இருக்காது.


வர்க்கங்களும் ஜாதிகளும் இனபேதங்களும் அழிந்து போனாலும் தனி மனிதர்களின் தனி வாழ்வில், அந்தரங்கமான அகவாழ்வில் அவற்றின் தன்மைகள், அவற்றின் பாதிப்புக்கள் கொஞ்ச காலத்திற்கு – ஏன் வெகு காலத்திற்கு-ஏற்பட்டுக் கொண்டுதானிருக்குமோ என்று அவனுக்குத் தோன்றியது.


உலகம் இப்படித்தான் இருக்கும். இதில் மாட்டிக்கொண்டு தனது தன்மையை இழந்துவிடாமல் காப்பாற்றிக்கொண்டால் போதும் என்று அவன் கற்றுக் கொண்டு எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.


முடியுமா, முடியாதா? இருக்கிறதா, இல்லையா? உண்மையா, பொய்யா என்கிற எல்லா எதிர்மறை நியாயங்களை விடவும் ‘முடியும்’ என்கிற, ‘இருக்கிறது’ என்கிற ‘உண்மை’ என்கிற நம்பிக்கையில்தான் மனித வாழ்க்கை நடந்து

கொண்டிருக்கிறது.



To buy from Amazon, pls click here


Recent Posts

See All
வேள்பாரி- 2:

நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம், அதிகாரம் உயிர் பெறாத இடத்தில அன்பு மட்டுமே தழைத்திருக்கும் இப்படி அன்பு மட்டுமே தழைத்து, அதிகாரம்...

 
 
 

Comments


©2021 by Reflections. Proudly created with Wix.com

bottom of page